Posts

சிவன் பாடல் ( சிவமயமாக தெரிகிறதே )

Image
ஐந்தான முகம் எதிரில் அருள் பொழியுதே... அணலான மலை காண ...மணம் குளிருதே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... புவணங்கள் ஆளும் அண்ணாமலையே... புவணங்கள் ஆளும் அண்ணாமலையே... எனது விழிகளில் காணும் பொழுதிலே...மாறிடுதே..மணம் ஊறிடுதே... அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே... உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே... அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே... உண்ணாமுலை நாதா...எங்கள் உள்ளம் நிறைந்த்தோனே... சிவமயமாக தெரிகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே...சிந்தையில் சிவயோகம் வருகிறதே... யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே... யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா... யுகம் நாண்கு தாண்டியே...முகம் வேறு காட்டியே... யகம் யாவும் ஆள்கின்ற...அருணாச்சலா... சத்தியம் நீதான்...சகலமும் நீதான்... நித்தியம் என்னில்... நிலைப்பவன் நீதான்... அருணாச்சலா...உனை நாடினேன்... அருணாச்சலா...உனை நாடினேன்... சிவ லீலை செய்யாமல்..சிறுஏனை ஆட்கொள்ள... சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா... சிறுதேனும் தயவோடு அருள்வாயப்பா...

விநாயகர் பாடல் ( கணபதியே வருவாய் )

Image
கணபதியே வருவாய் அருள்வாய் (கணபதியே) மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மங்கள இசை என்தன் நாவினில் உதிக்க (கணபதியே) ஏழு சுரங்களில் இன்னிசை பாட எங்கணும் இன்பம் பொங்கியே ஓட தாளமும் பாவமும் ததும்பிக் கூத்தாட தரணியில் யாவரும் புகழ்ந்து கொண்டாட (கணபதியே) தூக்கிய துதிக்கை வாழ்த்துக்கள் அளிக்க தொனியும் மணியென க­ரென் றொலிக்க ஊக்குக நல்லிசை உள்ளம் களிக்க உண்மை ஞானம் செல்வம் கொழிக்க (கணபதியே)

முருகன் பாடல் ( அறுபடை வீடு )

Image
அறுபடை வீடு கொண்ட திருமுருகா திருமுருகாற்றுப்படை தனிலே வருமுருகா முருகா (அறுபடை) பாட்டுடைத் தலைவன் என்று உன்னை வைத்தேன் உன்னைப் பாடித் தொழுவதற்கே என்னை வைத்தேன் முருகா (அறுபடை) வேண்டிய மாம்பழத்தைக் கணபதிக்கு - அந்த வெள்ளிப்பனித் தலையர் கொடுத்ததற்கு ஆண்டியின் கோலமுற்று மலை மீது - நீ அமர்ந்த பழனி ஒரு படைவீடு (அறுபடை) ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து - நல்ல ஓம் எனும் மந்திரத்தின் பொருள் உரைத்து தந்தைக்கு உபதேசம் செய்த மலை - எங்கள் தமிழ்த்திருநாடு கண்ட சுவாமிமலை (அறுபடை) தேவர் படைத்தலைமை பொறுப்பெடுத்து தோள்கள் தினவெடுத்துச் சூரன் உடல் கிழித்து கோவில் கொண்டே அமர்ந்த ஒருவீடு - கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படைவீடு (அறுபடை) குறுநகை தெய்வானை மலரோடு - உந்தன் குலமகளாக வரும் நினைவோடு திருமணக்கோலம் கொண்ட ஒரு வீடு - வண்ண திருப்பரங்குன்றம் என்னும் படைவீடு (அறுபடை) தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து - வள்ளி தெள்ளுத் தமிழ் குறத்தி தனை மணந்து காவல் புரிய என்று அமர்ந்த மலை - எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை (அறுபடை) கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு - நல்ல காட்ச

அய்யப்பன் பாடல் ( பகவான் சரணம் )

Image
பகவான் சரணம் பகவதி சரணம் சரணம் சரணம் ஐயப்பா பகவதி சரணம் பகவான் சரணம் சரணம் சரணம் ஐயப்பா அகமும் குளிரவே அழைத்திடுவோமே சரணம் சரணம் ஐயப்பா பகலும் இரவும் உன் நாமமே சரணம் சரணம் ஐயப்பா கரிமலை வாசா பாபவினாசா சரணம் சரணம் ஐயப்பா கருத்தினில் வருவாய் கருணையைப் பொழிவாய் சரணம் சரணம் ஐயப்பா மஹி சம்ஹாரா மதகஜ வாகனா சரணம் சரணம் ஐயப்பா சுகுண விலாசா சுந்தர ரூபா சரணம் சரணம் ஐயப்பா ஆறுவாரமே நோன்பிருந்தோம் பேரழகா உன்னைக் காண வந்தோம் பால் அபிஷேகம் உனக்கப்பா பாலனைக் கடைக்கண் பாரப்பா முத்திரை தேங்காய் உனக்கப்பா தித்திக்கும் நாமம் எனக்கப்பா கற்பூர தீபம் உனக்கப்பா-உன் பொற்பத மலர்கள் எனக்கப்பா தேவன் பாதம் தேவி பாதம் சேவடி சரணம் ஐயப்பா நாவினில் தருவாய் கீதமப்பா தேவை உன் திருப்பாதமப்பா நெய்யபிஷேகம் உனக்கப்பா-உன் திவ்ய தரிசனம் எமக்கப்பா தையினில் வருவோம் ஐயப்பா-அருள் செய்யப்பா மனம் வையப்பா பகவான் சரணம் பகவதி சரணம் பகவானே பகவதியே தேவனே தேவியே ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம்

அம்மன் பாடல் ( கற்பூர நாயகியே )

Image
கற்பூர நாயகியே ! கனகவல்லி, காளி மகமாயி கருமாரியம்மா, பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா, பூவிருந்த வல்லி தெய்வானையம்மா, விற்கோல வேதவல்லி விசாலாட்சி, விழிகோல மாமதுரை மீனாட்சி, சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே, சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே புவனம் முழுதும் ஆளுகின்ற புவனேஸ்வரி, புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி, நவ நவமாய் வடிவாகும் மஹேஸ்வரி, நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி, கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி, காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி, உவமானப் பரம்பொருளே ஜகதீஸ்வரி, உன்னடிமைச் சிறியேனை நீ ஆதரி உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே ! எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற, அன்னியரை கெஞ்சிடுதல் முறையோ அம்மா, கண்ணீரை துடைத்து விட ஓடிவாம்மா, காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா, சின்னவளின் குரல் கேட்டு முகம் திருப்பு, சிரித்தபடி என்னை தினம் வழியனுப்பு கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும், காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும், பண்ணமைக்கும் நா உன்னயே பாட வேண்டும், பக்தியோடு கை உனையே கூட வேண்டும், எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும், இருப

திருமால் பாடல் ( ஆயர்பாடி மாளிகையில் )

Image
ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ அவன் வாய்நிறைய மண்ணை உண்டு மண்டலத்தைக் காட்டியபின் ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஓய்வெடுத்து தூங்குகின்றான் தாலேலோ ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னமிட்டு மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ அந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவனுறங்க மண்டலமே உறங்குதம்மா ஆராரோ மண்டலமே உறங்குதம்மா ஆராரோ நாகப்படம் மீதில் அவன் நர்த்தனங்கள் ஆடியதில் தாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ அவன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும் யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ யாரவனைத் தூங்கவிட்டார் ஆராரோ கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும் அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ அவன் பொன்னழகைப் பார்ப்பதற்க்கும் போதை முத்தம் பெறுவதற்க்கும் கன்னியரே கோபியரே வாரீரோ கன்னியரே கோபியரே வாரீரோ ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல் மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ

சிவன் பாடல் ( சிவலிங்கம் )

Image
அரஹர அரஹர அரஹர லிங்கம் சிவசிவ சிவசிவ சிவசிவ லிங்கம் கருணையின் வடிவே கைலாச லிங்கம் காசினி காக்கும் விசுவ லிங்கம் திருப்பரங் குன்றின் பரங்குன்ற லிங்கம் திருவா னைக்காவில் ஜம்புலிங்கம் ஆடல் புரிந்த கூடல்லிங்கம் அன்பைப் பொழியும் ஆட்கொண்ட லிங்கம் பாடலின் சிறந்த மருதீச லிங்கம் பக்திக் கடலின் திருவீச லிங்கம் வெற்றி நல்கும் செயங்கொண்ட லிங்கம் விண்ணவர் போற்றும் வளரொளி லிங்கம் கற்றவர் ஏற்றும் ஐநூற்று லிங்கம் கண்ணின் ஒளியாம் காளத்தி லிங்கம் சுயம்பாய் வந்த தான்தோன்றி லிங்கம் சொர்க்கம் நல்கும் தேசிக லிங்கம் பயனாம் நயனாம் பசுபதி லிங்கம் பாலைய நாட்டின் சண்டீஸ்வர லிங்கம் புள்ளூர் வாழும் வைத்திய லிங்கம் பொங்கும் மங்கள சங்கர லிங்கம் உள்ளம் உறைந்த பூசலார் லிங்கம் உயர்ந்த மயிலைக் கபாலி லிங்கம் மார்க்கண்டன் காத்த அமுதீச லிங்கம் மாதேவன் வீரசேகர லிங்கம் ஆர்த்துப் போற்றும் காளீஸ்வர லிங்கம் ஆவுடைக் கோவிலின் ஜோதிலிங்கம்